ஆன்மிகம்

சிறப்பு மிகு கும்பகோணம் பற்றி தெரியுமா?

Published On 2016-06-15 08:30 GMT   |   Update On 2016-06-15 08:30 GMT
கும்பகோணத்தில் கொண்டாடப்படும் சிறப்பான விழாக்களில் மாசி மகமும் ஒன்றாகும்.
பிற தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் சிறப்பை எடுத்துரைக்கும் வாக்கியமாகும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு பகவான் சிம்ம ராசியில் இருக்கும் போது வருவது மகாமகம் ஆகும்.

அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தில் புனித நீராடுவார்கள். அன்று மகாமக குளத்தில் எல்லா உலகத்தில் உள்ள தேவர்கள் நீராட வருவதாக ஐதீகம்.

Similar News