ஆன்மிகம்

செம்பூரில் குலசை முத்தாரம்மன் முளைப்பாரி வழிபாடு

Published On 2016-09-27 04:16 GMT   |   Update On 2016-09-27 04:16 GMT
மும்பை செம்பூர் குலசை முத்தாரம்மன் தசரா குழுவினர் சார்பில் முளைப்பாரி வழிபாடு நடந்தது.
மும்பை செம்பூர் குலசை முத்தாரம்மன் தசரா குழுவினர் சார்பில் முளைப்பாரி வழிபாடு நடந்தது. இதையொட்டி மதியம் உச்சி பூஜை, மாலை பெண்களின் கும்மிப்பாடல்கள், இரவு குலசை முத்தாரம்மன், ஞானமூர்த்தீஸ்வரர் திருவுருவ ரத ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் செம்பூர் சாய்பாபா நகரில் இருந்து புறப்பட்டு செல்காலனி ரோடு, சிரஞ்சீவி நகர் வழியாக பூஜை மண்டபத்தை வந்தடைந்தது. 

பின்னர் இரவு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், சிறப்பு அழைப்பாளர்களாக கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., திருநெல்வேலி தெட்சணமாற நாடார் சங்க மும்பை கிளை செயலாளர் எம்.எஸ்.காசிலிங்கம் நாடார், தொழில் அதிபர் ஆ.பி.சுரேஷ், பி.எஸ்.கே.முத்துராமலிங்கம், தொழில் அதிபர்கள் ராஜேந்திரன்சாமி, மணிகண்டன், கவிஞர் செந்தூர் நாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Similar News