ஆன்மிகம்

கைலாசநாதர் கோவில் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2018-05-17 03:24 GMT   |   Update On 2018-05-17 03:24 GMT
நெல்லை சந்திப்பு கைலாசபுரம் சவுந்தரவல்லி சமேத கைலாசநாதர் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லை சந்திப்பு கைலாசபுரம் சவுந்தரவல்லி சமேத கைலாசநாதர் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 5 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், காலை 8 மணிக்கு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து கொடியேற்றமும் நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி வீதி உலா நடக்கிறது. வருகிற 23-ந் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 24-ந் தேதி காலை 8 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். 
Tags:    

Similar News