ஆன்மிகம்
பழனி மலைக்கோவிலில் போகர் ஜெயந்தி விழா
பழனி மலைக்கோவிலில் போகர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மலைக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள போகர் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
பழனி மலைக்கோவிலில் போகர் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மலைக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள போகர் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் போகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
அதைத்தொடர்ந்து போகர் சன்னதியில் உள்ள மரகத லிங்கத்துக்கும் சிறப்பு பூஜைகள், அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக மறிக்கொழுந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து போகர் சன்னதியில் உள்ள மரகத லிங்கத்துக்கும் சிறப்பு பூஜைகள், அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக மறிக்கொழுந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.