ஆன்மிகம்

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

Published On 2018-12-20 09:04 GMT   |   Update On 2018-12-20 09:04 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு மார்கழி மாதம் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எதுவென்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கிறார்கள்.

இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1.40 மணிக்கு தொடங்கி, சனிக்கிழமை நள்ளிரவு 12.25 மணிக்கு பவுர்ணமி நிறைவு பெறுகிறது. அந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News