ஆன்மிகம்
இறைவன் பக்தர்களிடம் கேட்பது பணம், பொருள் என்றல்ல. ஏழை எளியவர்களின் தலைமுடி காணிக்கையையும் அவன் மகிழ்வோடு பெற்றுக்கொள்கிறான்.
திருப்பதிக்குச் செல்பவர்கள் தவறாமல் வேங்கடவனுக்குக் காணிக்கை செலுத்தத் தவறுவதில்லை. பணமும், நகைகளும் இறைவனுக்கு அள்ளித் தருகிறார்கள். இதன்மூலம் அவனது அருட்கடாட்சத்தைப் பெறுகிறார்கள். இதனினும் முக்கியமானது தலைமுடி காணிக்கை. இறைவன் பக்தர்களிடம் கேட்பது பணம், பொருள் என்றல்ல. ஏழை எளியவர்களின் தலைமுடி காணிக்கையையும் அவன் மகிழ்வோடு பெற்றுக்கொள்கிறான். இறைவனுக்கு பக்தர்கள் சமர்ப்பிப்பது தலைமுடி காணிக்கை.
தங்களது கவலை, தொல்லை, துன்பம், துயரம், இப்படி வேதனைகளை எல்லாம் அவனிடம் சமர்ப்பித்து விட்டு தங்களை மகிழ்ச்சிப்படுத்திக் கொள்ளும் ஒரு நேர்த்திக் கடனே தலைமுடி காணிக்கை. இக்காணிக்கையை பக்தர்கள் கல்யாணக்கட்டம் என்ற இடத்தில் சமர்ப்பிக்கிறார்கள். கன்னியாகுமரி திருப்பதி ஆலயத்தில் இதற்கென இட வசதி செய்யப்பட்டுள்ளது.
தங்களது கவலை, தொல்லை, துன்பம், துயரம், இப்படி வேதனைகளை எல்லாம் அவனிடம் சமர்ப்பித்து விட்டு தங்களை மகிழ்ச்சிப்படுத்திக் கொள்ளும் ஒரு நேர்த்திக் கடனே தலைமுடி காணிக்கை. இக்காணிக்கையை பக்தர்கள் கல்யாணக்கட்டம் என்ற இடத்தில் சமர்ப்பிக்கிறார்கள். கன்னியாகுமரி திருப்பதி ஆலயத்தில் இதற்கென இட வசதி செய்யப்பட்டுள்ளது.