ஆன்மிகம்

நாறும்பூநாதர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

Published On 2019-03-14 04:06 GMT   |   Update On 2019-03-14 04:06 GMT
பணகுடி அருகே பழவூர் நாறும்பூநாதர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பழவூரில் அமைந்துள்ள ஆவுடையம்பாள் சமேத நாறும்பூநாதர் சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் பங்குனி உத்திர திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும்.

இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் பூஜை நடைபெற்றது. பின்பு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு அபிஷேகத்துடன் சிறப்பு தீபாராதனை பூஜை நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் கும்பாபிஷேகம், சுவாமி வீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை பக்த பேரவையினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News