ஆன்மிகம்
கோவிலில் கொடியேற்ற நிகழ்ச்சிக்கு பிறகு தீபாராதனை நடந்த போது எடுத்த படம்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது

Published On 2019-03-15 04:53 GMT   |   Update On 2019-03-15 04:53 GMT
ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆரல்வாய்மொழி பரகோடி கண்டன் சாஸ்தா, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழா நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி அதிகாலையில் தேவாரம் நிகழ்ச்சியும், தொடர்ந்து கணபதி ஹோமமும் நடந்தது. 11 மணிக்கு இணை ஆணையர் அன்புமணி, தேவசம் கண்காணிப்பாளர் ஆனந்தன், கோவில் பக்தர்கள் சேவா சங்க தலைவர் முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.

பின்னர் தீபாராதனையும், தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கோவில் ஸ்ரீகாரியம் கண்ணதாசன், மேல்சாந்திகள் கிருஷ்ணன் பட்டர், பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார், பக்தர்கள் சேவா சங்க ஆலோசகர்கள் ஆறுமுக பிள்ளை, ஈஸ்வர பிள்ளை, கணபதியா பிள்ளை, வெள்ளாளர் அறக்கட்டளை பொதுச்செயலாளர் முத்துச்சாமி, பக்தர்கள் சங்க செயலாளர் பெருமாள், துணை தலைவர் விநாயகம், துணை செயலாளர் தம்புரான்குட்டி, பொருளாளர் ராக்கோடியான், சங்கரலிங்கம், முத்துராமன், தாணுபிள்ளை, முத்துசாமி, ஆனையப்பன், முருகன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜை, பல்வேறு நிகழ்ச்சிகள், வீதி உலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான 9-ம் திருவிழா அன்று மாலை 6 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. பக்தர்கள் சங்க தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்குகிறார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து தம்புரான் விளையாட்டு நடக்கிறது. 10-ம் திருவிழாவன்று இரவு 7 மணிக்கு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும், தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்திலும், சாஸ்தா அம்பாள் பூப்பந்தல் வாகனத்திலும் வீதி உலா வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் மற்றும் கோவில் பக்தர்கள் சேவா சங்க தலைவர் முத்துக்குமார் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News