ஆன்மிகம்

திருமலையில் வசந்தோற்சவம் 2-வதுநாள்: தங்கத்தேரோட்டத்தில் மலையப்பசாமி பவனி

Published On 2019-04-19 05:29 GMT   |   Update On 2019-04-19 05:29 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவத்தை முன்னிட்டு தங்கத்தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 2-வதுநாளான நேற்று காலை 7 மணியில் இருந்து 8 மணிவரை தங்கத்தேரோட்டம் நடந்தது. உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு வடம்பிடித்து இழுத்து, தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கோவில் ஊழியர்கள், பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... எனப் பக்தி கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தங்கத்தேரோட்டம் முடிந்ததும் காலை 9 மணியளவில் கோவிலில் இருந்து உற்சவர்கள் வசந்த மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, பகல் 11 மணியில் இருந்து 12 மணிவரை உற்சவர்களுக்கு ஆஸ்தானம், சிறப்புப்பூஜைகள் நடந்தது.

வசந்தோற்சவத்தையொட்டி பவுர்ணமி அன்று மாலை நேரத்தில் நடக்கும் கருடசேவை (தங்கக்கருட வாகன வீதிஉலா) மற்றும் திருப்பாவாடை சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டன.
Tags:    

Similar News