உடற்பயிற்சி

கருப்பை சம்பந்தமான நோய்களை குணமாக்கும் கூர்மாசனம்

Published On 2023-01-12 04:25 GMT   |   Update On 2023-01-12 04:25 GMT
  • இடுப்பு எலும்பு, முதுகுத் தண்டை வலிமையாக்கும்.
  • சிறுநீரகத்தை தூண்டச் செய்து கழிவுநீரை வெளியேற்ற உதவுகிறது.

இக்காலக்கட்த்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பாதிக்கப்படுவது இரத்தசோகை. அதுமட்டுமின்றி பெண்கள் கர்ப்பப்பை கோளாறுகளால் குழந்தையின்மையை அடைகின்றன. இக்குறைகளைத் தீர்க்க இக்கூர்மாசனத்தை தினமுமம் செய்து பயன் பெறுங்கள்..

பெயர்க்காரணம்: கூர்மம் என்றால் ஆமை. இந்த ஆசனம் செய்யும் போது நம் உடலானது ஆமையின் வடிவத்தில் இருப்பதால் இதற்கு கூர்மாசனம் என்ற பெயர் வந்தது.

செய்முறை

விரிப்பின் மீது அமர்ந்த நிலையில் முழங்காலை மடித்து இருகால்களின் அடிப்பாகம், அதாவது பாதங்களை ஒன்றுக்கொன்று எதிராக சுமார் பத்து அங்குல இடைவெளி இருக்கும்படி கொண்டு வரவும். அந்த இடைவெளியில் நெற்றியில் தரையில் பதித்தபடி, இரு கைகளையும் முதுகின் பின்புறமாக (படத்தில் உள்ளபடி) பிடிக்க வேண்டும். முதலில் அவ்வாறு பிடிக்க வராது. பின்னர் நன்றாக பழகிய பின்னர் சுலபமாகும். இந்த நிலையில் 15 வினாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். குனியும்போது முதுகுத் தண்டின் கீழே (நுனி பாகத்தை )யும், நிமிரும்போது புருவ மத்தியிலும் நினைவை செலுத்தவும். மூன்னு முறை இந்த ஆசனத்தை இரண்டு நிமிட இடைவெளி விட்டு செய்யவும்..

பலன்கள்

இந்த யோகாசனம் செய்வதால் மன அமைதி கிடைக்கும். இடுப்பு எலும்பு, முதுகுத் தண்டு எலும்பு, கழுத்தெலும்பு சமந்தப் பட்ட வலி நீங்கும். ரத்தத்தில் சிகப்பணுக்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் குறைந்து குழந்தை பாக்கியம் கிடைக்கச் செய்யும்..

உண்ட உணவுகளை எளிதில் செரிமானம் அடையச்செய்து செரிமான மண்டலத்தை நல்ல நிலையில் இருக்க செய்கிறது. சுவாசப்பாதையை சீர் செய்வதுடன் மூக்கடைப்பு, நெஞ்சு சளி, இருமல், மூச்சுவிட சிரமம் ஏற்படுதல், இவற்றை சரி செய்கிறது.

தண்டுவடத்திற்கும், முள்ளந்தண்டு எலும்புகளுக்கும் வன்மையை அளிக்கிறது. இதயத்திற்கு செல்லும் இரத்தத்தை அதிகரித்து இதயத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்க செய்கிறது.

நுரையீரலுக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கச்செய்கிறது. சிறுநீரகத்தை தூண்டச் செய்து கழிவுநீரை வெளியேற்ற உதவுகிறது. பெண்களின் இடுப்பு பகுதி தசைகளை வன்மையடையச் செய்கிறது. கருப்பையை தூண்டி கருப்பை சம்பந்தமான நோய்களை சரி செய்கிறது. நரம்பு மண்டலத்தை தூண்டச்செய்கிறது. சுக மகப்பேறு அடைவதற்கு உதவி புரிகிறது.

Tags:    

Similar News