உடற்பயிற்சி

உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தாசனம்

மனதை ஒருநிலைப்படுத்தும் ஆசனம்

Published On 2022-11-06 04:42 GMT   |   Update On 2022-11-06 04:42 GMT
  • இந்த ஆசனம் மூட்டுப்பகுதியை நன்கு வலுவாக்கும்.
  • நரம்பு சுருள் பிரச்சனை சரியாகும்.

செய்முறை :

விரிப்பில் நேராக நிற்க வேண்டும். பார்வையை ஒரு இடத்தில் பதித்து, இடது கையை மேலே உயர்த்தி, இடது கன்னத்தை ஒட்டியவாறு வைக்க வேண்டும்.

பின்னர் வலது காலை இடுப்பு வரை தூக்கி வலது பக்கமாக திருப்ப வேண்டும். கால் முட்டியை மடக்கக்கூடாது. வலது கையால் இடது கால் கட்டை விரலை பிடித்து கொள்ள வேண்டும்.(படத்தில் உள்ளபடி)

இப்போது இடது கையை பக்கவாட்டில் நீட்டி சின் முத்திரை வைத்து தலையை இடது பக்கமாக திருப்பி சின் முத்திரையை பார்க்க வேண்டும். நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். முதுகை வளைக்கக்கூடாது. இந்த நிலையில் ஒவ்வொரு முறையும், 20 முதல் 30 வினாடிகள் நின்ற பிறகு பழைய நிலைக்கு வரவும். பின்னர் கால்களை மாற்றி வலது பக்கம் இவ்வாறு செய்ய வேண்டும். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்யலாம்.

பயன்கள் :

1. மூட்டுப்பகுதி நன்கு வலுவடைகிறது

2. மனம் ஒரு நிலை அடைந்து தியான சக்தி தூண்டப்படுகிறது

3. ஜீரண சக்தி அதிகமாகிறது

4. ஜணன உறுப்புகள் நன்கு தூண்டப்பட்டு சரியாக இயங்குகிறது

5. நரம்பு சுருள் பிரச்னை சரியாகிறது.

Tags:    

Similar News