சமையல்

இத்தனை நாள் இது தெரியாமா போச்சே...

Published On 2024-07-21 08:57 GMT   |   Update On 2024-07-21 08:57 GMT
  • காய்ந்த எலுமிச்சம் பழத் தோலை அலமாதிகளில் வைத்தால் பூச்சி தொல்லை இருக்காது, கொசு தொல்லையும் வராது.
  • முட்டைக்கோஸில் வரும் பச்சை வாடையும் வீசாது. இதை சாப்பிடுவதால் கேஸ்ட்ரிக் பிரச்சனையும் வராது.

• வாழைக்காய் பஜ்ஜி செய்யும் போது, 1 குழி கரண்டி இட்லி மாவு சேர்த்து கலந்து பஜ்ஜி சுட்டு பாருங்க, சுவையா இருக்கும்.

• பூரிக்கு மாவு பிசையும் போது 1/2 ஸ்பூன் சர்க்கரை பவுடர் சேர்த்து பிசைந்தால், நீண்ட நேரம் பூரி உப்பலாக, மொறுமொறுப்பாக இருக்கும்.

• காய்ந்த எலுமிச்சம் பழத் தோலை அலமாதிகளில் வைத்தால் பூச்சி தொல்லை இருக்காது, கொசு தொல்லையும் வராது.

• ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அதில் 1 ஸ்பூன் முகத்துக்கு போடும் பவுடரை போட்டு, அடுப்பில் வைத்து 2 நிமிடம் கொதிக்க விட்டால் சமையலறையில் வீசும் துர்நாற்றம் நீங்கும்.

• அரிசி கழுவிய இரண்டாவது தண்ணீரை கீழே கொட்டாதிங்க. நீங்கள் வைக்கும் புளிக்குழம்பில், இந்த அரிசி களைந்த தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க விட்டால் குழம்பு திக்காகவும் ருசியாகவும் ஆரோக்கியமாகவும் கிடைக்கும்.

• உதிர்த்து வைத்திருக்கும் பூண்டுடன் உருளைக்கிழங்கை வைத்தால், சீக்கிரம் முளைத்து வராமல் இருக்கும்.

• குழம்பு கொதிக்கும் போது தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், சுடுதண்ணீரை மட்டுமே ஊற்றவும். அப்போதுதான் குழம்பின் சுவை மாறாது.


• முட்டைகோஸ் பொரியல் தாளிக்கும் போது கடுகு, வரமிளகாயோடு சேர்த்து, கொஞ்சம் துருவிய இஞ்சி, 2 கிராம்பு சேர்த்துக்கோங்க. முட்டைக்கோஸில் வரும் பச்சை வாடையும் வீசாது. இதை சாப்பிடுவதால் கேஸ்ட்ரிக் பிரச்சனையும் வராது.

• தேங்காய் சட்னி அரைக்கும் போது அதில் கோலி குண்டு சைஸ் புளி சேர்த்து அரைத்தால், சட்னி சீக்கிரம் கெட்டுப் போகாது.

• கடாயில் இருந்து அந்த பொரியலை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி, அதன் மேலே 1 பிரட்டை வைத்து, மூடி போட்டு 1/2 மணி நேரம் கழித்து, அந்த பிரட் துண்டை எடுத்து விட்டால், பொரியலில் தீய்ந்த வாடை வீசாது.


• 1 கப் கோதுமை மாவுக்கு, 1 ஸ்பூன் உருக்கிய வெண்ணெயும், தேவையான அளவு தண்ணீரும், விட்டு பிசைந்து சப்பாத்தி சுட்டால் 10 மணி நேரம் ஆனாலும் சப்பாத்தி சாஃப்டா இருக்கும்.

• பூண்டை குக்கரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, 5 - 6 விசில் விட்டு வேக வைத்து கடைந்து, பூண்டு குழம்பு வைத்தால், ஒரு பூண்டு கூட ஒதுக்கி வைக்க மாட்டாங்க.

• புளித்த தோசை மாவின் மேலே பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் தூவி, இட்லி பொடியையும் தூவி, நெய்விட்டு மிதமான தீயில் ஓரம் எல்லாம் முறுகலாக வரும்படி சுட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Tags:    

Similar News