செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்துடன் இணைந்து செயல்படுவோம்- சரத்குமார்

Published On 2018-05-17 11:29 GMT   |   Update On 2018-05-17 11:29 GMT
வரும் சட்டமன்ற தேர்தலில் இறைவன் நினைத்தால் விஜயகாந்துடன் இணைந்து செயல்படுவோம் என்று பாளையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் சரத்குமார் பேசினார். #Sarathkumar #Vijayakanth #TNAssemblyElection
நெல்லை:

ச.ம.க. துணை பொதுச் செயலாளர் சுந்தர் இல்ல விழா பாளை மார்க்கெட்டில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. விழாவில் ச.ம.க. தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு அருதி பெரும்பான்மை இருந்தும் அது தேர்தலுக்கு பிந்தய கூட்டணி என கூறி பா.ஜனதாவை ஆட்சிக்கு அழைத்தது தவறு.


இது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும். அரசியலிலும், கலைத்துறையிலும் விஜயகாந்த் எனக்கு நண்பர். நான் கஷ்டப்பட்ட நேரத்தில் உதவியவர்.

வரும் சட்டமன்ற தேர்தலில் இறைவன் நினைத்தால் விஜயகாந்துடன் இணைந்து செயல்படுவோம். தென்காசி தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார். #Sarathkumar #Vijayakanth #TNAssemblyElection
Tags:    

Similar News