உள்ளூர் செய்திகள்

Special train ஆபரேஷன்

Published On 2022-09-09 10:17 GMT   |   Update On 2022-09-09 10:17 GMT
  • ஓணம் பண்டிகையைaயொட்டி, கூடுதலாக ஒரு ெரயில் மங்களூரு முதல் தாம்பரம் வரை இயக்கப்பட உள்ளது.
  • இரவு 7 மணிக்கு புறப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 7.52 மணிக்கு சேலம் வந்தடைகிறது.

சேலம்:

ஓணம் பண்டிகையை முன்னிட்டு ெரயில்வே நிர்வாகம் சேலம் வழியாக சிறப்பு ெரயில்களை இயக்குகிறது. இந்த நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி, கூடுதலாக ஒரு ெரயில் மங்களூரு முதல் தாம்பரம் வரை இயக்கப்பட உள்ளது.

அதன்படி மங்களூரு- தாம்பரம் சிறப்பு ெரயில் (வண்டி எண்-06050) வருகிற 11-ந் தேதி மங்களூருவில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 7.52 மணிக்கு சேலம் வந்தடைகிறது.

பின்னர் இங்கிருந்து 7.55 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர் வழியாக தாம்பரத்திற்கு மதியம் 1.45 மணிக்கு சென்றடையும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News