உள்ளூர் செய்திகள்

இலவச கோடைகால சிறப்பு சித்த மருத்துவ முகாம்

Published On 2023-04-26 06:27 GMT   |   Update On 2023-04-26 06:27 GMT
  • இலவச கோடைகால சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது
  • கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்

பெரம்பலூர்.

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாபெரும் இலவச கோடைகால சிறப்பு சித்த மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்.இந்த சிறப்பு மருத்துவ முகாமில் சித்த மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம் மற்றும் இயற்கை யோகா மருத்துவத்தின் சார்பாக கோடைகால உணவுகள், கோடைகால நோய்களை தீர்க்கக் கூடிய மருந்துகள் மற்றும் நமது அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தக்கூடிய இயற்கை பொருட்களின் நன்மைகள் குறித்தும், அதை எந்த நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் வகையில் அமைக்கப்பட்ட கண்காட்சியினை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.மேலும் பொது மக்களுக்கு இலவச மூலிகை கன்றுகள் வழங்கப்பட்டது முகாமில் பங்கு கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவத்திற்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகத்தினை கலெக்டர் கற்பகம் வழங்கினார்.முகாமில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் அர்ஜுனன், இருக்கை மருத்துவ அலுவலர் மருத்துவர் சரவணன், உதவி சித்த மருத்துவ அலுவலர்கள் மருத்துவர் விஜயன் ,மருத்துவர் செந்தமிழ்ச்செல்வி மருத்துவர் கற்பகம் ,மருத்துவர் கலைச்செல்வி, ஹோமியோபதி உதவி மருத்துவ அலுவலர் மருத்துவர் ராகுல்ஜி இயற்கை யோகா மருத்துவ உதவி அலுவலர் மருத்துவ கலைவாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News