உள்ளூர் செய்திகள் (District)
ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி செய்த வாலிபருக்கு 10 மாதம் ஜெயில்
- சேலம் அழகாபுரம் பெரியபுதூரை சேர்ந்தவர் ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி செயதனார்.
- இதில் அண்ணாமலைக்கு 10 மாத ெஜயில் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கிறிஸ்டல் பபிதா தீர்ப்பு வழங்கினார்.
சேலம்:
சேலம் அழகாபுரம் பெரியபுதூரை சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஏலச்சீட்டு நடத்தினார். இதில் 60-க்கும் மேற்பட்டோர் பணம் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்ததாக 2014-ல் அழகாபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது மோசடி புகார் என்பதால் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் அண்ணாமலைக்கு 10 மாத ெஜயில் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கிறிஸ்டல் பபிதா தீர்ப்பு வழங்கினார்.