உள்ளூர் செய்திகள் (District)

1521 கிலோ பட்டுக்கூடுகள் ரூ.5.96 லட்சத்திற்கு ஏலம்

Published On 2023-11-17 09:40 GMT   |   Update On 2023-11-17 09:40 GMT
  • தருமபுரி ஏல அங்காடிக்கு வரத்து குறைவு:
  • ரூ.5.96 லட்சத்திற்கு விற்பனையானது.

 தருமபுரி, 

தமிழகத்திலேயே மிகப்பெரிய பட்டுக்கூடு ஏல அங்காடி தருமபுரியில் அமைந்துள்ளது. இந்த பட்டுக்கூடு அங்காடிக்கு கன்னியாகுமரி, ராமநாத புரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழ கம் முழுவதும் உள்ள பட்டுக் கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகள் பட்டுக்கூடு ஏலத்தில் கலந்து கொள்ளு கின்றனர்.

தருமபுரி பட்டுக்கூடு அங்காடியில் மஞ்சள், வெள்ளை என தினசரி 5 முதல் 8 டன் வரையிலான பட்டுக்கூடுகள் ஏலம் விடப்படும்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்தில், 52 விவசாயிகள் கொண்டு வந்த 4053 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ரூ.16.58 இலட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இந்த நிலை யில் நேற்று திடீரென பட்டுக்கூடு வரத்து குறைந்து 28 விவசாயிகள் கொண்டு வந்த 1521 கிலோ வெண் பட்டுக்கூடுகள் குறைந்தபட்சம் ரூ.503-க்கும் அதிகபட்சம் 241 ரூபாய்க்கும் சராசரி 391 ரூபாய் என மொத்தம் 5.96 இலட்சத்திற்கு விற்பனையானது.

தருமபுரி மாவட்ட பட்டுக்கூடு அங்காடிக்கு தமிழகத்தில் உள்ள மாவட் டங்களில் இருந்து பட்டுக் கூடு வரத்து அதிகரித்த நிலையில் மழையின் காரண மாக திடீரென விவசாயிக ளின் வரத்து குறைந்துள்ள தாக அதிகாரிகள் தெரிவித்த னர்.

Similar News