கள்ளக்குறிச்சி அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது
- கள்ளக்குறிச்சி அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் தொண்டனந்தல் கிராம பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி :
கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சூர்யா, சோலை, ஜெய ராமன் தலைமையிலான போலீசார் தொண்டனந்தல் கிராம பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த அடைக்கலராஜ் (வயது 35) என்பவர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீ சார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அடைக்கலராஜிக்கு திருவண்ணாமலை மாவட்டம் பெருங்குளத்தூர் பகுதியை சேர்ந்த அரவிந்த் (25) என்பவர் சாராயத்தை கடத்தி வந்து விற்பனைக்கு கொடுத்து வந்தது தெரிந்தது.
இதையடுத்து அடைக்கலராஜ் மூலம் அரவிந்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விற்பனைக்கு சாராயம் கொண்டுவருமாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இருசக்கர வாகனத்தில் சாராயத்தை கடத்தி வந்த அரவிந்தை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அடைக்கலராஜ், அரவிந் ஆகியோரிடம் இருந்து 35 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.