உள்ளூர் செய்திகள்
மரக்காணத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடும் 2 வாலிபர்கள் கைது
- தீர்த்தவாரியில் அடிக்கடி மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் காணாமல் போவதாக மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு புகார் வந்த வண்ணமிருந்தது.
- போலீசார் விசாரித்தபோது.இரு வாலிபர்கள் அப்பகுதியில் உள்ள வாகனங்களை திருடுவதற்கான கருவிகளுடன் இருந்ததை கண்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:
மரக்காணம் அருகேதீர்த்தவாரியில் அடிக்கடி மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவாகனங்கள் காணாமல் போவதாக மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு புகார் வந்தவண்ணம் இருந்தது. இதனால் அந்தப் பகுதியில் மரக்காணம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இன்று காலை 7.30 மணிக்கு தீர்த்தவாரியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவரையும், மற்றொரு உள்ளூர் வாலிபரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள வாகனங்களை திருடுவதற்கான கருவிகளுடன் இருந்ததை கண்டனர். அவர்களை பிடித்த மரக்காணம் போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.