செய்திகள் (Tamil News)
காரியாபட்டி அருகே லாரி மீது கார் மோதல்: 2 பேர் பலி
காரியாபட்டி அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியதில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
காரியாபட்டி:
சென்னை பழைய பல்லாவரம் பெருமாள் நகரைச் சேர்ந்தவர் பத்மநாபன் (வயது45). இவரது சகோதரர் காந்திமதிநாதன் (35). ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் ஆகும்.
அங்கு நடைபெறும் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இருவரும் காரில் புறப்பட்டனர். உறவினர் குமார் (25) என்பவர் காரை ஓட்டினார்.
இன்று காலை 7.30 மணி அளவில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பை–பாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.
இதில் இடிபாடுகளில் சிக்கி காந்திமதிநாதனும், டிரைவர் குமாரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயம் அடைந்த பத்மநாபன் காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்த விபத்து குறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சென்னை பழைய பல்லாவரம் பெருமாள் நகரைச் சேர்ந்தவர் பத்மநாபன் (வயது45). இவரது சகோதரர் காந்திமதிநாதன் (35). ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் ஆகும்.
அங்கு நடைபெறும் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இருவரும் காரில் புறப்பட்டனர். உறவினர் குமார் (25) என்பவர் காரை ஓட்டினார்.
இன்று காலை 7.30 மணி அளவில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பை–பாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.
இதில் இடிபாடுகளில் சிக்கி காந்திமதிநாதனும், டிரைவர் குமாரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயம் அடைந்த பத்மநாபன் காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்த விபத்து குறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.