செய்திகள் (Tamil News)

அய்யம்பேட்டை அருகே விபத்தில் வாலிபர் பலி

Published On 2016-04-10 10:26 GMT   |   Update On 2016-04-10 10:26 GMT
அய்யம்பேட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார்.

அய்யம்பேட்டை:

அய்யம்பேட்டை அருகே நெய்தலூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜாங்கம் மகன் அறிவழகன்(வயது 27).

இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் அய்யம்பேட்டை அருகே மானாங்கோரை கிராமத்திற்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். நெடார் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தார். ஆபத்தான நிலையில் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் வினாயக மூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News