மதுரை:
மதுரை கூடல்நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது56), ஆட்டோ டிரைவர். நேற்று காலை வீட்டில் இருந்த சென்ற இவர்,அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இன்று அதிகாலை மதுரை மேலகோபுரம் பகுதியில் உள்ள தியேட்டர் அருகே மயங்கிய நிலையில் ராமச்சந்திரன் கிடப்பதை அந்த வழியே சென்றவர்கள் பார்த்துள்ளனர்.
அவரது சட்டைபையில் இருந்த அடையாளங்கள் மூலம் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ராமச்சந்திரனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினர். அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை.
இதுகுறித்து திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் மர்ம சாவு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.