செய்திகள் (Tamil News)

கோவை கமிஷனர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2016-04-10 11:10 GMT   |   Update On 2016-04-10 11:09 GMT
கோவை கமிஷனர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

கோவை,ஏப்.10–

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் பூபதிராஜா (வயது 24). தனியார் நிறுவன ஊழியர்.

இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சரண்யா (21) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால் இது காதலாக மாறியது. காதலர்கள் பல இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்தனர்.

இவர்களின் காதல் விவகாரம் சரண்யாவின் வீட்டுக்கு தெரியவந்தது. பூபதிராஜா வேறுசமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சரண்யாவின் பெற்றோர் காதலுக்கு எதிப்பு தெரிவித்தனர்.

இதனால் பிரித்து விடுவார்களோ என்ற பயத்தில் இருந்த காதலர்கள் திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை வீட்டை விட்டு வெளியேறி மருதமலை கோவிலில் வைத்து நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் பாதுகாப்பு கேட்டு கோவை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி காதலர்களை சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News