செய்திகள் (Tamil News)

திருவண்ணாமலை அருகே வழிப்பறி திருடன் கைது

Published On 2016-04-10 11:58 GMT   |   Update On 2016-04-10 11:58 GMT
திருவண்ணாமலை அருகே வழிப்பறி செய்த திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருகே உள்ள சொரகொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிகாமணி (வயது 25). விவசாயி. நெல் அறுவடை எந்திரம் சொந்தமாக வைத்துள்ளார். அதனை வாடகைக்கு விடுகிறார்.

இந்த நிலையில் சிகாமணி மல்லவாடி அருகே உள்ள கருந்துவாம்பாடி கிராமத்தில் நெல் அறுவடை எந்திரத்தை வாடகைக்கு விட்ட பணத்தை வசூல் செய்துவிட்டு வீடு திரும்பினார். அப்போது அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர், சிகாமணியை தாக்கி ரூ.35 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பினார்.

இதுகுறித்து சிகாமணி, திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சிகாமணியிடம் வழிப்பறி செய்தது, ஆடையூரை சேர்ந்த அப்பாஸ்(18) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அப்பாஸ் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

Similar News