செய்திகள் (Tamil News)

திருச்சியில் கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் டிரைவர் சாவு

Published On 2016-04-10 16:01 GMT   |   Update On 2016-04-10 16:01 GMT
திருச்சியில் தாறுமாறாக ஓடிய கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
திருச்சி:

திருச்சி விமான நிலையம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் பிரபு (வயது 23). கார் டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு கொட்டப்பட்டு பால்பண்ணை அருகே  காரில் சென்றபோது பிரபுவின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. இதனால் முன்னால் சைக்கிளில் சென்றவர் மீது மோதிவிட்டு, சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கார் உருண்டு கவிழ்ந்தது.

இதில் காருக்குள் சிக்கிய பிரபு படுகாயமடைந்தார். சைக்கிளில் சென்றவரும் காயமடைந்தார். இதனை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் பிரபு உள்பட 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் வழியிலேயே பிரபு பரிதாபமாக உயிரிழந்தார். சைக்கிளில் சென்று காயமடைந்தவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News