செய்திகள் (Tamil News)
திருவள்ளூர் அருகே லாரி மோதி வாலிபர் பலி
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்தில் பலியானார்
திருவள்ளூர்:
திருவள்ளூர் லட்சுமி புரத்தை சேர்ந்தவர் கார்த்திக் (20) அதே பகுதி மோவூரை சேர்ந்தவர் தாமோதரன் (26) 2 பேரும் ஏ.சி. மெக்கானிக். இவர்கள் நேற்று பணிக்காக திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் திருவள்ளூர் மேல் நல்லாத்தூரில் சென்றபோது பின்னால் வந்த சிமெண்ட் கலவை லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கார்த்திக் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். தாமோதரன் காயம் அடைந்தார்.
விபத்து நடந்தவுடன் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடினார். அவரை பொது மக்கள் விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் உத்திரபிரதேசத்தை சேர்ந்த விஜயகுமார் பால் (22) என்று தெரியவந்தது.
திருவள்ளூர் லட்சுமி புரத்தை சேர்ந்தவர் கார்த்திக் (20) அதே பகுதி மோவூரை சேர்ந்தவர் தாமோதரன் (26) 2 பேரும் ஏ.சி. மெக்கானிக். இவர்கள் நேற்று பணிக்காக திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் திருவள்ளூர் மேல் நல்லாத்தூரில் சென்றபோது பின்னால் வந்த சிமெண்ட் கலவை லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கார்த்திக் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். தாமோதரன் காயம் அடைந்தார்.
விபத்து நடந்தவுடன் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடினார். அவரை பொது மக்கள் விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் உத்திரபிரதேசத்தை சேர்ந்த விஜயகுமார் பால் (22) என்று தெரியவந்தது.