மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி லாரி மோதி பலி
சென்னிமலை:
சென்னிமலை அருகே உள்ள நல்லப்பாளி ஜெ.ஜெ நகரை சேர்ந்தவர் மோகன் ராஜ் (வயது 20). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருடன் கலைவாணி (18) என்ற பெண் வேலைபார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர்கள் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.
சென்னிமலை அருகே உள்ள எல்லக்காடு என்ற இடத்தில் வரும் போது அந்த வழியாக வந்த ஒரு லாரியும் மோட்டார் சைக்கிளும் கண் இமைக்கும் நேரத்தில் மோதிக்கொண்டன.
இதில் மோட்டார் சைக்கிள் ஒட்டி வந்த மோகன் ராஜுக்கு தலையில் பலத்த அடிபட்டது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பின்னால் உட்கார்ந்து இருந்த கலைவாணியும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தார். இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார்ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.