செய்திகள் (Tamil News)

பெரியகுளம் அருகே ரேசன் பொருள் வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2016-06-29 10:02 GMT   |   Update On 2016-06-29 10:02 GMT
பெரியகுளம் அருகே ரேசன் பொருட்கள் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
பெரியகுளம்:

பெரியகுளம் அருகே உள்ள எண்டப்புளி புதுப்பட்டியில் ரேசன் பொருட்கள் சரிவர வழங்கப்படவில்லை. இது பற்றி பொதுமக்கள் கேட்டபோது இம்மாத இறுதியில் வாருங்கள் தருகிறோம் என்று ஊழியர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து நேற்று வந்த மக்களிடம் நாளை வாருங்கள் என்று கூறியுள்ளனர். அதன்படி இன்று வந்தபோது மீண்டும் நாளை வாருங்கள் என்று அலைக்கழித்ததால் ஆத்திரமடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் மதுரை சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு பெரியகுளம் வடகரை போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்றனர்.

மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசப் பேச்சு நடத்தினர். ரேசன் பொருட்கள் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததால் மறியலை கைவிட்டனர்.

Similar News