செய்திகள் (Tamil News)
சிதம்பரம் அருகே ரெயில் மோதி வாலிபர் பலி
சிதம்பரம் அருகே ரெயில் மோதி வாலிபர் துண்டான நிலையில் இறந்து கிடந்தார்.
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே உள்ள பெறாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் காமராஜ் (வயது 25). சிங்கப்பூரில் கட்டிட வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு காமராஜ் ஊர் திரும்பினார்.
இந்தநிலையில் அவர் வேலக்குடி ரெயில்வே கேட் அருகே உடல் துண்டான நிலையில் இறந்து கிடந்தார். அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? தண்டாவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி இறந்தாரா? என்று தெரியவில்லை.
தகவல் அறிந்ததும் சிதம்பரம் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காமராஜ் சாவு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம் அருகே உள்ள பெறாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் காமராஜ் (வயது 25). சிங்கப்பூரில் கட்டிட வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு காமராஜ் ஊர் திரும்பினார்.
இந்தநிலையில் அவர் வேலக்குடி ரெயில்வே கேட் அருகே உடல் துண்டான நிலையில் இறந்து கிடந்தார். அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? தண்டாவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி இறந்தாரா? என்று தெரியவில்லை.
தகவல் அறிந்ததும் சிதம்பரம் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காமராஜ் சாவு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.