செய்திகள் (Tamil News)

மேலூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2016-08-22 10:19 GMT   |   Update On 2016-08-22 10:19 GMT
மேலூர் அருகே இளம்பெண் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். வலியால் அலறி துடித்த அவர், சிறிது நேரத்தில் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

மேலூர்:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சேக்கிபட்டியை சேர்ந்தவர் மூவேந்திரன். இவர் பெங்களுரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி ரேவதி (வயது24). இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சேக்கிபட்டியில் உள்ள மாமனார் வீட்டில் குழந்தையுடன் ரேவதி வசித்து வந்தார்.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரேவதி, உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். வலியால் அலறி துடித்த அவர், சிறிது நேரத்தில் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ரேவதியின் தாய் மல்லிகா மேலூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், தனிப்பிரிவு ஏட்டு ராஜா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ரேவதி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News