செய்திகள் (Tamil News)

சேலத்தில் உயிருக்கு போராடிய மயில் மீட்பு

Published On 2016-08-22 13:58 GMT   |   Update On 2016-08-22 13:58 GMT
சேலத்தில் புதரில் பறக்க முடியாமல் உயிருக்கு போராடிய மயிலை மீட்டனர்.

சேலம்:

சேலம் திருமணிமுத்தாறு அருகே புதரில் மயில் ஒன்று பறக்க முடியாமல் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தது. அந்த வழியாக சென்ற ஒருவர் மயிலை மீட்டு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கால்நடை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார். கழுத்தில் அடிப்பட்டிருந்ததால் அந்த மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த மயிலை சேலம் வனத்துறையிடம் ஒப்படைப்பதற்காக எடுத்து சென்றனர்.

Similar News