பழனி அருகே தீயில் கருகிய கணவன்-மனைவி
பழனி:
பழனி தாராபுரம் ரோட்டில் நால் ரோடு அடுத்து உள்ளது பெரிச்சிபாளையம் இந்த ஊரின் மேற்கு தெருவில் குடியிருப்பவர் சலாம் உசேன் (வயது 25) பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.அவரது மனைவி நந்தினி என்ற பானு (21). 2 குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பின் 2 பேரும் தாராபுரத்தில் 5 வருடங்களும் அதன் பின்னர் கடந்த ஒரு வருடமாக சலாம் உசேனுக்கு சொந்த ஊரான பெரிச்சிபாளையத்தில் வசித்து வருகின்றனர். நேற்று பகல் மண்எண்ணெய் ஸ்டவ் பற்ற வைத்த போது ஏற்பட்ட விபத்தில் கணவன் மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக 2 பேரும் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் .மிகுந்த ஆபத்தான நிலையில் இருந்த அவர்களுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது மேல் சிகிச்சைக்காக அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.