செய்திகள் (Tamil News)

சத்தியமங்கலத்தில் வாசற்கால் தட்டி படுகாயம் அடைந்தவர் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2016-09-17 11:40 GMT   |   Update On 2016-09-17 11:40 GMT
சத்தியமங்கலத்தில் வாசற்கால் தட்டி படுகாயம் அடைந்தவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு:

சத்தியமங்கலம் கோண மூலை அருகே உள்ள ஏ.டி. காலனியைய சேர்ந்தவர் ராமசாமி (வயது 50).

இவர் கடந்த 6 மாதத்துக்கு முன்பு தனது வீட்டில் வாசற்கால்  தட்டி  கீழே விழுந்தார். இதனால் அவரது வலது கை மணிக்கட்டில் முட்டி விலகி விட்டது.

இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக ராமசாமியால் வேலைக்கு செல்ல முடியவில்லை.

இதனால் மனம் உடைந்த அவர் வி‌ஷத்தை குடித்து விட்டார். இதில் மயங்கி கிடந்த அவர் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பிறகு மேல் சிசிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News