செய்திகள் (Tamil News)
குடும்பத்தகராறில் பெண் தீக்குளித்து பலி: காப்பாற்ற முயன்ற கணவர் காயம்
தூத்துக்குடியில் குடும்பத்தகராறில் பெண் தீக்குளித்து பலியானார். காப்பாற்ற முயன்ற கணவரும் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி திரேஸ் புரத்தை சேர்ந்தவர் அன்டோ. இவரது மனைவி சகாயம் (வயது 47). மீனவரான அன்டோ அடிக்கடி குடித்து விட்டு கடலுக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றும் அன்டோ கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சகாயம் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
உடல் முழுதும் தீப்பற்றி எரிந்த நிலையில் சகாயம் கூக்குரலிட்டார். அவரை சகாயம் காப்பாற்ற முயன்றார். ஆனால் அதற்குள் உடலில் பயங்கர தீக்காயம் ஏற்பட்டு சகாயம் இறந்தார். அன்டோவுக்கும் காயம் ஏற்பட்டது. அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.