செய்திகள் (Tamil News)

தஞ்சையில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

Published On 2016-09-27 09:17 GMT   |   Update On 2016-09-27 09:17 GMT
தஞ்சையில் குண்டர் சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நேரு நகரை சேர்ந்தவர் உதயகுமார். இவருடைய மகன் சரவணன் (வயது22). பட்டுக்கோட்டை மேலத்தெரு ஆம்பல் காலனியை சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மகன் சுரேந்திரன் (23). இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், கலெக்டர் அண்ணாதுரையிடம் பரிந்துரை செய்தார். கலெக்டர் அண்ணாதுரை உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு குண்டர் சட்டத்தில் சரவணன், சுரேந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.

Similar News