செய்திகள் (Tamil News)

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம்: கலெக்டர் தகவல்

Published On 2016-09-28 10:02 GMT   |   Update On 2016-09-28 10:02 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் காவிரி குடிநீர் நாளை முதல் 2 நாட்களுக்கு நிறுத்தம் செய்யப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை 29,30 ஆகிய தேதிகளில் காவிரி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

காவிரி குடிநீர் திட்டத்தில், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திருச்சி அருகே முத்தரசநல்லூர் தலைமையிடத்தில் இருந்து பம்பிங் செய்யப்படுகிறது. இங்கு இன்றும் (28), நாளையும் (29) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதற்காக நீரேற்றம் இரண்டு நாட்கள் நிறுத்தப்படுகிறது.

இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 29 மற்றும் 30-ந்தேதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும், என்று மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

Similar News