செய்திகள் (Tamil News)
ராகுல் காந்தியை கைது செய்தது உரிமை மீறிய செயல்: நாராயணசாமி
ராணுவ வீரர் குடும்பத்தை சந்திக்க சென்ற ராகுல் காந்தியை கைது செய்தது உரிமை மீறிய செயல் என்று நாராயணசாமி பேட்டியளித்துள்ளார்.
ஆலந்தூர்:
புதுவை முதல்வர் நாராயணசாமி இன்று காலை டெல்லி செல்லும் போது சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது-
சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவில் இன்று முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட உள்ளதால் இடைத்தேர்தலை காட்டிலும் என்னுடைய மாநிலத்தின் உரிமைக்காக கலந்து கொள்ள செல்கிறேன்.
நீட் தேர்வு எழுத மாநிலத்தில் உள்ள மாணவ- மாணவிகளுக்கு உகந்த பாடங்கள் நடத்துவதற்கு கால அவகாசம் வேண்டும்.
நெல்லிக்குப்பம் இடைத்தேர்தலில் 16 கட்சிகள் ஆதரவு காங்கிரசுக்கு இருக்கிறது. மக்கள் தீர்ப்பு அளிப்பார்கள்.
அ.தி.மு.க.வுக்கு மற்ற கட்சிகள் ஆதரவு கொடுக்கிறார்கள் என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல் காந்தியை கைது செய்து அவரின் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. பொதுவாக பாதிக்கப்பட்டவர்களை அரசியல் கட்சி தலைவர்கள் சந்திப்பது இயல்பு.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை முதல்வர் நாராயணசாமி இன்று காலை டெல்லி செல்லும் போது சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது-
சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவில் இன்று முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட உள்ளதால் இடைத்தேர்தலை காட்டிலும் என்னுடைய மாநிலத்தின் உரிமைக்காக கலந்து கொள்ள செல்கிறேன்.
நீட் தேர்வு எழுத மாநிலத்தில் உள்ள மாணவ- மாணவிகளுக்கு உகந்த பாடங்கள் நடத்துவதற்கு கால அவகாசம் வேண்டும்.
நெல்லிக்குப்பம் இடைத்தேர்தலில் 16 கட்சிகள் ஆதரவு காங்கிரசுக்கு இருக்கிறது. மக்கள் தீர்ப்பு அளிப்பார்கள்.
அ.தி.மு.க.வுக்கு மற்ற கட்சிகள் ஆதரவு கொடுக்கிறார்கள் என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல் காந்தியை கைது செய்து அவரின் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. பொதுவாக பாதிக்கப்பட்டவர்களை அரசியல் கட்சி தலைவர்கள் சந்திப்பது இயல்பு.
இவ்வாறு அவர் கூறினார்.