செய்திகள் (Tamil News)
ஜெயலலிதா மறைவு: தற்கொலைக்கு முயன்ற கடலூர் வாலிபர்
கடலூரில் ஜெயலலிதா இறந்த துக்கம் தாங்காமல் வாலிபர் ஒருவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
கடலூர் முதுநகர் சராங்கு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 30). அ.தி.மு.க.தொண்டர். இவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இறந்ததை அறிந்து துக்கம் தாங்காமல் கண்ணீர் வடித்தபடி இருந்தார்.
இந்தநிலையில் கடலூர் முதுநகர் மணிகூண்டு எம்.ஜி.ஆர்.சிலை அருகே வந்தார். திடீரென்று அவர் உடைந்த பீங்கான் துண்டால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரது கழுத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விஜயகுமாரிடம் விசாரணை நடத்தினர்.
விஜயகுமாருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தசம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் முதுநகர் சராங்கு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 30). அ.தி.மு.க.தொண்டர். இவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இறந்ததை அறிந்து துக்கம் தாங்காமல் கண்ணீர் வடித்தபடி இருந்தார்.
இந்தநிலையில் கடலூர் முதுநகர் மணிகூண்டு எம்.ஜி.ஆர்.சிலை அருகே வந்தார். திடீரென்று அவர் உடைந்த பீங்கான் துண்டால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரது கழுத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விஜயகுமாரிடம் விசாரணை நடத்தினர்.
விஜயகுமாருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தசம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.