செய்திகள் (Tamil News)

திருச்செந்தூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சில்மி‌ஷம்: வாலிபர் கைது

Published On 2017-01-25 10:58 GMT   |   Update On 2017-01-25 10:58 GMT
திருச்செந்தூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலபுரம் சுனாமி நகரை சேர்ந்தவர் அருண்பட்டுராஜ். இவரது மனைவி செல்வமதி (வயது 23). அருண்பட்டுராஜ் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு பாளை சிறையில் உள்ளார். அவரது மனைவி செல்வமதி தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், சம்பவத் தன்று இரவு வீட்டில் செல்வமதி தனியாக இருந்தபோது அதே பகுதியை சேர்ந்த காளிதாஸ் என்ற விஜய் (25) என்பவர் வீட்டிற்குள் புகுந்து அவரிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வமதி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அதைக் கண்டதும் காளிதாஸ் அங்கிருந்து தப்பிச்சென்றார்.

இந்த சம்பவம் குறித்து செல்வமதி திருச்செந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காளிதாசை கைது செய்தனர்.

Similar News