செய்திகள் (Tamil News)

கட்டுமான பணி நடக்கும் வீட்டில் கள்ளக்காதல் ஜோடி உல்லாசம்: நேரில் பார்த்த பக்கத்து வீட்டுக்காரருக்கு மிரட்டல்

Published On 2017-01-25 13:12 GMT   |   Update On 2017-01-25 13:12 GMT
கட்டுமான பணி நடக்கும் வீட்டில் நள்ளிரவில் கள்ளக்காதல் ஜோடி உல்லாசம் இருந்ததை பக்கத்து வீட்டுக்காரர் நேரில் பார்த்ததால் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குலசேகரம்:

குலசேகரத்தை அடுத்த திருநந்திக்கரையில் ஒரு புதிய வீடு கட்டப்பட்டு வருகிறது. இந்த வீட்டின் ஒருபுறமும் மரப்பட்டறை நடத்தி வரும் தொழிலாளி ஒருவர் குடியிருந்து வருகிறார்.  அவரது வீட்டருகே மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபர்கள் 10 பேர் வாடகைக்கு தங்கியிருக்கிறார்கள்.

மரப்பட்டறையின் மற்றொரு புறம் வசித்து வருபவரின் மனைவியும், மார்த்தாண்டத்தில் வாலிபர்கள் பணிபுரியும் அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனால் வாலிபர்களும் அந்த பெண்ணும் அடிக்கடி சந்தித்து பேசிக் கொள்வது வழக்கம்.

சம்பவத்தன்று மரப்பட்டறையின் அருகே புதிதாக கட்டுமான பணி நடந்து வரும் வீட்டில் இருந்து சத்தம் கேட்டது. நள்ளிரவு நேரத்தில் ஆட்கள் நடமாடுவது போன்ற சத்தம் கேட்டதால் பக்கக்து வீட்டுக்காரர் கட்டுமான பணி நடக்கும் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு மார்த்தாண்டம் நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு வாலிபரும், அதே நிறுவனத்தில் பணியாற்றும் அந்த பெண்ணும் உல்லாசமாக இருப்பதை கண்டார்.

இதுபற்றி அவர் கட்டுமான பணி நடக்கும் வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்தார். அவர் அந்த பெண்ணையும், வாலிபரையும் அழைத்து எச்சரித்தார். இந்த சம்பவம் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்தது. இதனால் வாலிபருடன் உல்லாசமாக இருந்த பெண்ணின் கணவரும், உறவினர்களும் இந்த சம்பவத்தை வெளியில் கூறிய நபரை மிரட்டினார்கள். கொன்று விடுவதாகவும் எச்சரித்தனர். இதுபற்றி அவர் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தியதோடு அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

Similar News