செய்திகள் (Tamil News)
பெண்ணிடம் நகை திருடிய இலங்கை அகதிக்கு போலீஸ் வலைவீச்சு
திருவாடானை அருகே பெண்ணிடம் 10 பவுன் நகை திருடிய இலங்கை அகதியை போலீசார் தேடி வருகிறார்கள்.
தொண்டி:
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள அரசூரைச்சேர்ந்த சரிதா என்பவரிடம் 6 வருடங்களுக்கு முன்பு இலங்கையைச்சேர்ந்த அலங்காரம் மகன் அந்தோணி அடிமை(42) என்பவர் 10 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்றுள்ளார்.
மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்த அந்தோணி அடிமை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். திருடுவதையே தொழிலாகக் கொண்ட அந்தோணி அதன் பின் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார்.
எனவே அவர் மீது திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள அரசூரைச்சேர்ந்த சரிதா என்பவரிடம் 6 வருடங்களுக்கு முன்பு இலங்கையைச்சேர்ந்த அலங்காரம் மகன் அந்தோணி அடிமை(42) என்பவர் 10 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்றுள்ளார்.
மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்த அந்தோணி அடிமை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். திருடுவதையே தொழிலாகக் கொண்ட அந்தோணி அதன் பின் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார்.
எனவே அவர் மீது திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.