செய்திகள் (Tamil News)

மோட்டார் சைக்கிள்கள் மீது மினி லாரி மோதல்: கணவன்–மனைவி உள்பட 3 பேர் காயம்

Published On 2017-02-10 17:27 GMT   |   Update On 2017-02-10 17:27 GMT
ஆலங்குளம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது மினி லாரி மோதிய விபத்தில் கணவன், மனைவி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள துத்திகுளத்தை சேர்ந்த சேகர் மகன் மகேஷ் (வயது 29). இவருடைய மனைவி வசந்தி. இவர்கள் 2 பேரும் தென்காசிக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளில் நெல்லை– தென்காசி ரோட்டில் பாவூர்சத்திரத்தை அடுத்துள்ள கே.டி.சி. நகர் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது மினி லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மோதியது. அப்போது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ராமசந்திரபட்டணத்தை சேர்ந்த சரவணன் என்பவர் மீதும் மினி லாரி மோதியது.

இந்த சம்பவத்தில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த மகேஷ், அவரது மனைவி வசந்தி ஆகியோர் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சரவணன் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பாட்டார்.

இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய மினிலாரி டிரைவரை தேடி வருகிறார்.

Similar News