செய்திகள் (Tamil News)

கைத்தறி ரகத்தை விசைத்தறியில் உற்பத்தி செய்தவர்கள் மீது வழக்கு

Published On 2017-03-03 04:22 GMT   |   Update On 2017-03-03 04:22 GMT
ஈரோட்டில் கைத்தறி ரகத்தை விசைத்தறியில் உற்பத்தி செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னிமலை:

ஈரோடு மாவட்ட கைத்தறி ரக ஒதுக்கீட்டு சட்ட அமலாக்கப்பிரிவு உதவி இயக்குனர் கிரிதரன் சென்னிமலை பகுதியில் உள்ள விசைத்தறி கூடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டார்.

அப்போது சென்னிமலை அடுத்துள்ள முகாசி பிடாரியூரில் முத்துசாமி மற்றும் மேலப்பாளையம் மாதேஸ்வரா நகரை சேர்ந்த செல்வராஜ் ஆகிய இருவரும் கைத்தறிக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள டாபி ரக போர்வைகளை விசைத்தறியில் உற்பத்தி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து போர்வை ரகங்களை கைத்தறி அமலாக்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து கிரதரன் சென்னிமலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் முத்துசாமி, செல்வராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னிமலை பகுதியில் இதுபோல் ரக ஒதுக்கீடு சட்டத்திற்கு புறப்பாக விசைத்தறிகளில் அதிக அளவில் கைத்தறி போர்வை ரகங்களை திருட்டு தனமாக உற்பத்தி செய்வதால் கைத்தறி போர்வைகள் விற்பனை ஆகாமல் தேங்கி கிடக்கிறது எனவும் இது போல் ரக ஒதுக்கீட்டு துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்த வேண்டும் என கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News