செய்திகள் (Tamil News)
கோத்தகிரியில் காரில் ரேசன் அரிசி கடத்தல்: விற்பனையாளர் உள்பட 2 பேர் கைது
காரில் 50 கிலோ ரேசன் அரிசியை கடத்திய விற்பனையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோத்தகிரி:
கோத்தகிரி அருகே உள்ள வெஸ்ட்புரூக் பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட வழங்கல் அலுவலர் ஜீவரத்தினத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சையது அலி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தார். அப்போது அங்கு இருந்த ரேசன் கடையில் இருந்து கார் மூலம் 50 கிலோ அரிசியை கடத்தினர். இதையடுத்து போலீசார் ரேசன் அரிசியுடன் காரை பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த ரேசன் கடையின் விற்பனையாளர் ராஜேஷ்குமார், காரின் உரிமையாளர் பத்ரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.