செய்திகள் (Tamil News)
திருச்சி சிறையில் பெண் கைதி ‘திடீர்’ சாவு: போலீசார் தீவிர விசாரணை
திருச்சி சிறையில் கொலை வழக்கில் தண்டனை பெற்ற பெண் கைதி திடீரென இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
குமரி மாவட்டம் பேச்சிப்பாறையை சேர்ந்த கனகராஜ் மனைவி மரியதங்கம் (வயது 54). இவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்றிரவு மரியதங்கம் திடீரென மயங்கி விழுந்தார். உடனே சிறைக்காவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே மரியதங்கம் இறந்தார்.
அவர் எப்படி இறந்தார் என்று திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். வேறு ஏதேனும் காரணமா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டம் பேச்சிப்பாறையை சேர்ந்த கனகராஜ் மனைவி மரியதங்கம் (வயது 54). இவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்றிரவு மரியதங்கம் திடீரென மயங்கி விழுந்தார். உடனே சிறைக்காவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே மரியதங்கம் இறந்தார்.
அவர் எப்படி இறந்தார் என்று திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். வேறு ஏதேனும் காரணமா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.