செய்திகள் (Tamil News)

சேந்தங்குடி ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தல்

Published On 2017-04-17 15:09 GMT   |   Update On 2017-04-17 15:09 GMT
சேந்தங்குடி ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்து பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சீர்காழி:

சீர்காழியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் காமராஜ், மாவட்ட பொருளாளர் அறிவழகன், மகளிரணி மாவட்ட செயலாளர் ஞானவல்லி, துணை செயலாளர் கஸ்தூரி முன்னிலை வகித்தனர். மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா வரவேற்றார்.

நாகை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரவேண்டும், ஊராட் சிகளில் தட்டுபாடின்றி குடிநீர் வழங்கவேண்டும், சீர்காழி வட்டவழங்கல் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்த அனைவருக்கும் புதிய குடும்ப அட்டை வழங்க வேண்டும், சீர்காழி அடுத்த சேந்தங்குடி ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்து பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் கலைவேந்தன், சீர்காழி நகர பொருளாளர் மணிமாறன், நகர அமைப்பாளர் கரிகாலன், மயிலாடுதுறை ஒன்றிய அமைப்பாளர் மோகன்குமார், மயிலை.ஆனந்த், உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

முடிவில் நகர செயலாளர் ராஜதுரை நன்றி கூறினார்.

Similar News