செய்திகள் (Tamil News)

பெரியபாளையம் அருகே விவசாயி வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2017-05-12 06:52 GMT   |   Update On 2017-05-12 06:52 GMT
பெரியபாளையம் அருகே விவசாயி வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரியபாளையம்:

பெரியபாளையம் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் விவசாயி. இவர் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள ரே‌ஷன் கடைக்கு சென்றார்.

சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த போது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த 4 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. எனவே இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இது குறித்து பெரியபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News