செய்திகள் (Tamil News)

பண்ருட்டி அருகே ரோட்டில் ரகளை செய்த 4 பேர் கைது

Published On 2017-05-12 13:16 GMT   |   Update On 2017-05-12 13:16 GMT
பண்ருட்டி அருகே ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக பேசிக்கொண்டிருந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:

பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையை சேர்ந்தவர் தாமோதரன்(30) ஆட்டோ டிரைவர். இவர் இவருக்கு சொந்தமான ஆட்டோவை ஓட்டி சென்றார். அப்போது தொரப்பாடி பகுதியில் ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது ஆட்டோ மோதியது.

இதனால் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன்(47) என்பவருக்கும் ஆட்டோ டிரைவர் தாமோதரனுக்கும் இடையே தகறாறு ஏற்பட்டது. தாமோதரனுக்கு ஆதரவாக தொரப்பாடியை சேர்ந்த சரவணன்(38), பாலமுருகனுக்கு ஆதரவாக கோட்டலாம்பாக்கத்தை சேர்ந்த கார்த்தி(30) ஆகியோரும் ரகளையில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் அசிங்கமாக திட்டிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக பேசிக்கொண்டிருந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா ரகளையில் ஈடுபட்ட தாமோதரன், பாலமுருகன், சரவணன், கார்த்திக் ஆகிய 4 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Similar News