செய்திகள் (Tamil News)

விருதுநகரில் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த சமையல்காரர் சாவு

Published On 2017-06-01 10:17 GMT   |   Update On 2017-06-01 10:17 GMT
விருதுநகரில் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த சமையல்காரர் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:

காரியாபட்டி அருகே உள்ள பாம்பாட்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 24). சமையல்காரர்.

இவர் அதே ஊரைச் சேர்ந்த சுப்புராஜ் (40) என்பவருடன் மலையடிப்பட்டிக்கு சமையல் பணிக்கு சென்றார். மோட்டார்சைக்கிளில் அவர்கள் சென்றனர். சுப்புராஜ் ஓட்டிச்செல்ல, ராஜேஷ்குமார் பின்னால் அமர்ந்து இருந்தார்.

பாலவநத்தம்-மெட்டுக்குண்டு பகுதியில் அவர்கள் சென்றபோது எதிர்பாராத விதமாக ராஜேஷ்குமார் தவறி கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜேஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்து சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News