செய்திகள் (Tamil News)

பாவூர்சத்திரத்தில் ஆட்டோக்களில் பேட்டரி திருடிய 2 வாலிபர் கைது

Published On 2017-07-26 11:24 GMT   |   Update On 2017-07-26 11:24 GMT
பாவூர்சத்திரத்தில் ஆட்டோக்களில் பேட்டரி திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூரை சேர்ந்தவர் செல்வன் (வயது37). இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஒர்க்ஷாப் வைத்துள்ளார். இதில் பழுது பார்க்க 6 ஆட்டோக்களை நிறுத்தி வைத்திருந்தார்.

இந்த ஆட்டோக்களில் உள்ள 6 பேட்டரிகளும் திருட்டு போய்விட்டது. இதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் ஆகும். இதுகுறித்து செல்வன், பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் திப்பணம்பட்டியை சேர்ந்த சக்திவேல் (18), ஆறுமுகபாண்டி (15) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 6 பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News